
தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே காவல் துறையின் ஜீப் மோதியதில் திமுக பிரமுகர் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (42). திமுக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர். இவர் நேற்று சுரண்டை சேர்ந்தமரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அருகே, சாலையைக் கடந்து செல்ல முயன்றார். அப்போது, சேர்ந்தமரம் நோக்கிச் சென்ற போலீஸ் ஜீப் சுப்பிரமணியன் மீது மோதியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ifKJdok
0 Comments