Crime

மதுரை: ஈரோடு பிகேகேஎன் சாலையைச் சேர்ந்தவர் நவ்ரோஜ். இவர் சென்னையில் வசித்தபோது, சினிமா துறையைச் சேர்ந்த பிரபுஎன்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபு மூலம் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த ரகுநாதன், அவரது தம்பியும், நடிகருமான சந்திரன் ஆகியோருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரகுநாதன் தனது தம்பி சந்திரனை கதாநாயகனாக வைத்து புதிய திரைப்படம் எடுக்கப்போவதாகக் கூறி, நவ்ரோஜிடம் வட்டிக்குப் பணம் கேட்டுள்ளார். இதை நம்பிய நவ்ரோஜ் முதலில் ரூ.50 லட்சம், பின்னர் அவரது தம்பி நரேந்திரன் மூலம் ரூ.53 லட்சம், நண்பர்கள் ராஜ்குமார், கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து தலா ரூ.15 லட்சம் மற்றும் ஃபைனான்சியர் ஜான் என்பவர் மூலமாக ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1.83 கோடியை கொடுத்துள்ளனர். இதில் ரூ.42.94 லட்சம்மட்டும் வங்கி மூலம் அனுப்பிஉள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LyRGw0i

Post a Comment

0 Comments