
மதுரை: திருமங்கலம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென சீறிப் பாய்ந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் இரட்டையர் சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் பழ வியாபாரி ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் மதுரை மீனாட்சி பஜாரில் செல்போன் கடை நடத்துகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரம் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில் பூத்திருவிழாவுக்கு செல்ல திட்டமிட்டனர். இதன்படி, மணிகண்டன், அவரது மனைவி நாகஜோதி (28), இவர்களது மகன் சிவ ஆத்யா (10), இரட்டையர் மகள்களான சிவ ஆத்மிகா (8) சிவஸ்ரீ (8) மற்றும் மணிகண்டன் தந்தை கனகவேல் ( 58) தாய் கிருஷ்ணவேணி (55) ஆகியோர் காரில் புறப்பட்டு தளவாய்புரத்துக்குச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EQn1Gma
0 Comments