
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2021-ம் ஆண்டு செப். 13 முதல் 15-ம் தேதி வரை காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு நடைபெற்றது. 859 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்வை 3.83 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்வானவர்கள் பணியில் சேர்ந்து, ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீர் நகரங்களில் உள்ள காவல் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதனிடையே, தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததாக புகார்எழுந்தது. இதன்மூலம் 300 முதல் 400 பேர் வரை முறைகேடாக பணியில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் காவல் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் வி.கே. சிங் நேற்று கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/S4lUpTz
0 Comments