
நாமக்கல்: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி போதைக்காக விற்பனை செய்த 15 பேரை போலீஸார் கைது செய்தனர். ரூ.30 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (25). கட்டிடத் தொழிலாளியான இவர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘நானும், எனது நண்பர்களும் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வந்தோம். தற்போது, நான் பயன்படுத்துவது இல்லை. எனினும், இந்த மாத்திரைகளை பயன்படுத்துமாறு நண்பர்கள் என்னை கட்டாயப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HcBGAIn
0 Comments