
புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த ஆண்டு நடந்த இனக்கலவரத்தின்போது, 2023 ஆக.3-ம் தேதி பிஷ்ணுபூர் காவல் நிலைய ஆயுதக் கிடங்கில்இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் சிலர் நேற்று தகவல் தெரிவித்தனர்.
அசாமின் குவாஹாத்தியில் உள்ள கம்ரூப்பின் (மெட்ரோ) தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. சிபிஐயின் குற்றப்பத்திரிகையில், லைஷ்ராம் பிரேம் சிங், குமுக்சம் திரன் என்கிற தப்கா, மொய்ரங்தேம் ஆனந்த் சிங், அதோக்பம் கஜித் என்கிற கிஷோர்ஜித், லவுக்ரக்பம் மைக்கேல் மங்காங்சா என்கிற மைக்கேல், கோந்தவுஜம் ரோமோஜித் மைத்தேயி என்கிற ரோமோஜித், கெய்ஷம் ஜான்சன் என்ற ஜான்சன் ஆகிய ஏழு பெயர்கள் இடம்பிடித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YS6PMQ4
0 Comments