
சென்னை: தமிழ்நாடு வக்ஃபு வாரிய அலுவலகத்தில், உளவுப் பிரிவு காவலர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சி (தமிழ்நாடு) மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில், தமிழ்நாடு வக்ஃபு வாரியதலைமை அலுவலகம் உள்ளது.நேற்று முன்தினம் (13-ம் தேதி)இந்த அலுவலகத்துக்கு விசாரணைக்கு சென்றிருந்த உளவுப்பிரிவு (நுண்ணறிவு) காவலர் மாரிமுத்துவை வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் தாக்கியதாக தகவல் பரவி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p7Z6miP
0 Comments