Crime

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் கருங்காலி மரத்தை சட்டவிரோதமாக வெட்டி, பதுக்கிய மலைவாழ் மக்கள் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வத்திராயிருப்பு மற்றும் வருஷநாடு வனச்சரக பகுதியில் வனத்துறையில் பட்டியலிடப்பட்ட மரமான அரிய வகை கருங்காலி மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ஜெயந்த் நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த முருகன் (44), ராமலிங்கம் (30), சுரேஷ் (30) ஆகியோர் கருங்காலி மரங்களை வெட்டியது தெரிய வந்ததாக கூறப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OikEVgx

Post a Comment

0 Comments