Crime

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பண இரட்டிப்பு ஆசை காட்டியதோடு, அமலாக்கத் துறை அதிகாரிகள் போல நடித்து நூல் வியாபாரியிடம் ரூ.1.69 கோடி பணம் பறித்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை குமரன் நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் அங்கு ராஜ் ( 52 ). நூல் கமிஷன் வியாபாரி. திருப்பூர் பி.என். சாலையை சேர்ந்தவர் துரை என்ற அம்மாசை. இருவரும் நண்பர்கள். கடந்த மாத இறுதியில் இவர்களுக்கு வாட்ஸ் - அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த விஜய் கார்த்திக் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். மேலும், தங்களது நிறுவனத்தினர் வியாபார ரீதியான பணப் பரிவர்த்தனை செய்ததில் வெளி நாடுகளில் இருந்து வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கில் பணம் பெறப்பட்டு இருப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2xEtgcY

Post a Comment

0 Comments