
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே கூலிப்படையை ஏவி முதியவரை கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு வாரத்துக்குப் பின் நொய்யல் ஆற்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே காளிவலசு கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (80). இவருடைய மனைவி ராஜலட்சுமி (75). தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சோம சுந்தரத்துக்கு அதே பகுதியில் சொந்தமாக 30 ஏக்கர் நிலம் உள்ளது. சோம சுந்தரத்தின் சகோதரி சொர்ணாத்தாளின் மகனான கொற்ற வேல் (50) என்பவருக்கும், சோம சுந்தரத்துக்கும் பல ஆண்டுகளாக நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5BnA1Tr
0 Comments