Crime

உடுமலை: பொள்ளாச்சி பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் (55). பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவரும், அதே பகுதியில் வசிக்கும் குமார் (25) என்பவரும் சேர்ந்து பறவைகள் பிடிப்பதற்காக சென்றனர்.

கடந்த 27-ம் தேதி உடுமலை அடுத்த தாந்தோணி கிராமத்துக்கு சென்றபோது, இவர்களை கோழி திருடர்கள் என நினைத்து அதே பகுதியை சேர்ந்த சிலர் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதில், செங்கோட்டையன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fP1Mdhe

Post a Comment

0 Comments