Crime

சென்னை: பணப் பரிமாற்ற நிறுவன உரிமையாளர் கொடுத்தனுப்பிய ரூ.13 லட்சம் பணத்துடன் மாயமான ஊழியரைக் கடத்தி தாக்கிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான மேலும் இருவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது: சென்னை,தண்டையார் பேட்டை, வைத்தியநாதன் தெருவில் வசிப்பவர் அப்துல்ரகுமான்(32).

இவர் மண்ணடியைச் சேர்ந்த அயூப் என்பவரின் பணப்பரிமாற்றம் (மணி எக்ஸ்சேஞ்ச்) நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அயூப் பணப்பரிமாற்றம் செய்ய கொடுத்த ரூ.13 லட்சத்துடன் அப்துல் ரகுமான்மாயமானார். அதிர்ச்சி அடைந்த அயூப் பல இடங்களில் தேடியும் அப்துல் ரகுமானைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6H5ITLE

Post a Comment

0 Comments