Crime

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தருமபுரியில் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அருகே உள்ள மணிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் ( 27 ). நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர் திமுக-வைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது சமூக ஊடகத்தில் ( வலைதளங்களில் ) தவறான பதிவு மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு செய்தி ஒன்றை ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் தனது பக்கத்தில் காளியப்பன் பதிவிட்டு உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gBnD9mt

Post a Comment

0 Comments