
புதுச்சேரி: புதுவையில் தங்கி வேலை செய்து கொண்டு, இரவு நேரங்களில் பைக்குகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி கோரிமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் கோரிமேடு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்ற இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் 3 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் நேற்று சாரம் அவ்வை திடல் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TpSNMgK
0 Comments