Crime

திருவாரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டவரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

கவிஞர் வைரமுத்து குரலில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை தவறாக சித்தரித்து, சமூக வலை தளத்தில் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இது குறித்து திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இளைய ராஜா, திருத்துறைப் பூண்டி போலீஸில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் கழனியப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன், சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் கணபதி ஆகியோர் அடங்கிய தனிப் படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Lxt0o5g

Post a Comment

0 Comments