
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆலய கணக்கு வழக்குகள் குறித்து கேள்வி கேட்டவர் கொலை செய்யப்பட்டார். ஆலய பங்குத்தந்தை தலைமறைவானார்.
திங்கள்நகர் அருகே உள்ள மைலோடு மடத்துவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது மகன் சேவியர் குமார் (45). இவர் அரசு போக்குவரத்துக் கழக கன்னியாகுமரி பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ஜெமினி (40) மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zNMle1s
0 Comments