Crime

மதுராந்தகம்: இன்சூரன்ஸ் பணத்தை பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக, நண்பனைக் கொலை செய்துவிட்டு, தான் இறந்ததாக ஊர் மக்களையும், இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் ஏமாற்ற நினைத்த நபர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணூர் பகுதியில், கடந்த செப்.16-ம் தேதி தீப்பற்றி எரிந்த குடிசை வீட்டிலிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக, ஒரத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மேற்கண்ட சம்பவத்தில் டில்லிபாபு என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (38) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேலூர் மாவட்டம், கலாஸ்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(32), தாம்பரம் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த கீர்த்திராஜன் ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QwAcbs0

Post a Comment

0 Comments