
திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற இளைஞர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு தொடங்கிய ஜனவரி முதல் நாளே கொலை நடந் தது. அதேபோல் 2023-ம் ஆண்டு முடியும் டிசம்பர் 31-ம் தேதியும் கொலை நடந்தது. சராசரியாக வாரம் ஒரு கொலை என கடந்த ஆண்டில் கொலைச் சம்பவங்கள் நடந்தன. இதில் இரட்டைக் கொலை, ஓடும் பேருந்தில் கொலை என சில கொலைச் சம்பவங்கள் பொது இடங்களில் நடந்து மக்களை அச்சமடையச் செய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வட மதுரை அருகே வன்னிய பாறைப் பட்டியில் இடப்பிரச்சினை காரணமாக கொலை நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VDHJztw
0 Comments