
கரூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் வழங்கவும் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
கரூர் திருமா நிலையூரைச் சேர்ந்தவர் மேகநாதன் (63). இவர் மனைவி மின்சாரம் தாக்கி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இவரது வீட்டில் ஒரு பெண் வாடகைக்கு குடியிருந்தார். அவரது 14 வயதான இளைய மகள் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்தச் சிறுமியை மேகநாதன் வீட்டு வேலைக்கு அழைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் சிறுமியை பாத்திரம் கழுவ வீட்டுக்கு அழைத்த மேகநாதன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7zlPA4O
0 Comments