Crime

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நமணசமுத்திரம் பகுதியில் நள்ளிரவில் லாரி மோதி பக்தர்கள் 5 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூரில் இருந்து பிள்ளையார்பட்டி வழியாக அய்யப்பன் கோயிலுக்கு செல்லக்கூடியவர்கள் ஒரு வேனிலும், திருவள்ளூரில் இருந்து ராமேசுவரம் செல்லக்கூடிய ஓம்சக்தி கோயில் பக்தர்கள் மற்றொரு வேனிலும், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் செல்லக்கூடியவர்கள் ஒரு காரிலும் நேற்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.

இந்த வாகனங்களில் வந்த அனைவரும் புதுக்கோட்டை-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் வட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே உள்ள மறவப்பட்டியைச் சேர்ந்த முகமது ஹக்கீம்(40) என்பவரது டீக்கடை அருகே சாலையோரமாக நேற்று (டிச.29) நள்ளிரவில் வாகனங்களை நிறுத்திவிட்டு, டீ குடித்துள்ளனர். சிலர் டீக்கடையிலும், சிலர் வாகனங்களுக்கும் அமர்ந்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lLW15Rj

Post a Comment

0 Comments