
சென்னை: சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான டிஜிபிஅலுவலகம் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை எதிரே உள்ளது. இந்த அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்று இ-மெயில் ஒன்று வந்தது. செந்தில் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தகடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது: போலீஸாருக்கு அவசர தகவல். சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வைத்துள்ளேன். முதல் வெடிகுண்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள நினைவு தூண் அருகே 2 கிலோ கிராம் எடையில் வைத்துள்ளேன். அது வெடிக்காமல் இருக்க அதை கவனமாக கையாண்டு அப்புறப்படுத்துங்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GxTMQYi
0 Comments