Crime

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் போலீஸாரை தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற 2 ரவுடிகள், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த 2 போலீஸார் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவது, மாமூல் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.ஜி. கண்ணன் எச்சரித்துள்ளார்.

காஞ்சிபுரம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சரவணன் என்ற பிரபாகரன் (35). இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவரை 4 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்தது. காஞ்சிபுரம் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UYizAB9

Post a Comment

0 Comments