
மதுரை: ரூ.100 கோடி மோசடி வழக்கில்,பிரணவ் ஜுவல்லரி உரிமையாளரை 7 நாட்கள் போலீஸ் காவலில்எடுத்து விசாரிக்க, மதுரை டான்பிட்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பிரணவ் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக் கடைகள் தொடங்கி, மாதாந்திர நகைசேமிப்பு திட்டம் நடத்தப்பட்டது.இந்நிலையில் வாடிக்கையாளர் களுக்கு பணம் திரும்ப அளிக்காமல் திடீரென கடைகள் மூடப்பட்டன.
இதுகுறித்து மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், ரூ.100 கோடி அளவுக்கு மோசடி கண்டு பிடிக்கப்பட்டதால், வழக்குதிருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், இவர் மனைவிகார்த்திகா ஆகியோர் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4tVYgTu
0 Comments