
மேட்டுப்பாளையம்: வாடகைக்கு வீடு எடுத்து, போலி மதுபானங்கள் தயாரித்து விற்றது தொடர்பாக இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தொட்டிபாளையம், செந்தூர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக போலி மது பானங்கள் தயாரிக்கப்படுவதாக பெரியநாயக்கன் பாளையம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையிலான போலீஸார் தகவல் கிடைத்த இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு போலி மதுபாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வருவது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e1hlLU2
0 Comments