Crime

சென்னை: கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற வாக்குவாதம் மற்றும் மோதல் தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. மீட்பு பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இருப்பினும் மழை மீட்பு பணியில் அரசு எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ எபினேசர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டுள்ளார். அப்போது எம்எல்ஏவை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டபோது வராமல் மழைநீர் வடிந்த பின்பு எதற்காக இங்கு வந்தீர்கள்? என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nPTxKvf

Post a Comment

0 Comments