
சென்னை: பின்னி மில்லுக்கு சொந்தமான இடத்தை அளக்க சென்றபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, திமுக பிரமுகர்கள் உட்பட மேலும் சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை திருவிக நகர் பல்லவன் சாலை பகுதியில் பின்னி மில் நிறுவனத்துக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்நிலையில், பின்னி மில் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் தி.நகர் பகுதியை சேர்ந்தவழக்கறிஞர் ஒருவர் உள்ளிட்டோர் அந்த நிலத்தை அளப்பதற்காக அண்மையில் சென்றுள்ளனர். அப்போது, அங்கு 20-க்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். அவர்களில் 3 பேர் திமுக பிரமுகர்கள் எனகூறப்படுகிறது. அவர்கள் வழக்கறிஞர் உள்ளிட்ட நிலத்தை அளக்க வந்தவர்களிடம், இந்த நிலம் திருவிகநகர் குடியிருப்போர் நலச் சங்கத்துக்கு சொந்தமானது. எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்க கூடாதுஎன வாக்குவாதம் செய்தனராம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cY4LlBj
0 Comments