
சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்களை திருடிவந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கொளுத்துவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கோகுல் (25). இவர் கடந்த 7-ம் தேதி இரவு,திருமங்கலம் சாந்தம் காலனி, 14-வது தெருவில் உள்ள தனதுசகோதரர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு வீட்டுக்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மறுநாள் காலைபார்த்தபோது அது திருடுபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடத்தை சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qm5TXDr
0 Comments