
ராமநாதபுரம்: காதலனுடன் வசித்து வந்த நர்சிங் மாணவி திடீரென உயிரிழந்தது குறித்து, ராமநாதபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்தவர் தாமோதரன். ஆட்டோ ஓட்டுநரான இவர், தற்போது ராமநாதபுரம் வீரபத்திர சாமி கோயில் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் கடைசி மகள் ஹரிணி (17), ராமநாதபுரம் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்ற ஹரிணி, ஒரு வாரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uwh2p7W
0 Comments