
திருவண்ணாமலை: சந்தவாசல் அடுத்த படைவீடு ஊராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தை மது அருந்தும் கூடமாக மாற்றிய சமூக விரோத கும்பல் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், விவசாயி களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவ சாயத்துக்கு அடுத்த படியாக ‘கால்நடை வளர்ப்பு’ பிரதானமாக உள்ளது. மழைக் காலங்களில் கோமாரி உள்ளிட்ட நோய்கள் தாக்குகின்றன. இதனால், கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கால்நடைகளை விவசாயிகள் அழைத்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளை போன்று கால்நடை மருத்துவமனையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சந்தவாசல் அடுத்த அ.கோ.படைவீடு ஊராட்சி, வீரக்கோயில் பகுதியின் நட்சத்திரக்குன்று அடிவாரத்தில் கால்நடை மருத்துவமனை உள்ளது. படைவீடு ஊராட்சிக்கு உட்பட்ட வீரக்கோயில், வேட்டகிரிபாளைம், மல்லிகாபுரம், ராமநாதபுரம், சாமந்திபுரம், துரிஞ்சாபுரம், பெருமாள்பேட்டை, தேவனாங்குப்பம், காளிகாபுரம், கேசவபுரம் உட்பட 32 குக்கிராமங்களில் வளர்க்கப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இங்குதான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கால்நடை மருத்துவமனையை, தங்களின் கட்டுப்பாட்டுக்கு சமூக விரோத கும்பல் கொண்டு வந்துவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GAeR2dx
0 Comments