
கோவை: ஆயுர்வேத மசாஜ் செய்வதாக கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்த 9 பேர் கும்பலை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த 45 வயதான நபர், மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், “இணைய தளம் மூலம் ஆயுர்வேத மசாஜ் தொடர்பான தகவலை அறிந்து, அதில் குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டேன். அவர்கள் கூறியபடி ரூ.8.25 லட்சம் தொகையை செலுத்தினேன். அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DheqVJC
0 Comments