
கோவை: கோவை நகைக்கடையில் 200 பவுன் திருடப்பட்ட வழக்கு தொடர்பாக, குற்றவாளியை தேடி தனிப்படை காவலர்கள் கேரளா, பொள்ளாச்சி, உடுமலை, பழநி உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 28-ம் தேதி அதிகாலை ஏ.சி வென்டிலேட்டர் வழியாக நுழைந்த மர்ம நபர், 200 பவுன் நகையை திருடிச் சென்றார். இது தொடர்பாக கடையின் மேலாளர் ஆல்டோ ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xEDhFR1
0 Comments