Crime

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்படும் நபரான நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷூக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸை நிறுத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் பேரிடமிருந்து ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் உள்பட 21 பேருக்கு எதிராக பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பணமோசடியில் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும், பாஜக மாநில ஓபிசி பிரிவு துணைத் தலைவருமான ஆர்.கே.சுரேஷூக்கும் தொடர்புள்ளதாக கூறி அவருக்கு போலீஸார் சம்மன் பிறப்பித்துள்ளனர். அவர் தனது மனைவியுடன் துபாய்க்கு சென்ற நிலையில், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QYNfgJd

Post a Comment

0 Comments