Crime

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள நகைப் பட்டறையில் 6.5 கிலோ திரவ நிலையிலான தங்கம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தியாகராய நகர் ராமேசுவரம் சாலையில் வசிப்பவர் நந்த குமார் ஜக்தாப் (43). இவர், தனது வீட்டின் தரைத் தளத்தில், நகை கடைகளின் பழைய நகைகளை வாங்கி, உருக்கி, புது நகைகளாக மாற்றிக் கொடுக்கும் நகைப் பட்டறையை நடத்தி வருகிறார். இவரது நகைப் பட்டறையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 6 பேர் வேலை செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8G2MreW

Post a Comment

0 Comments