Crime

சேலம்: சேலம் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தலையை துண்டித்து சாலையில் வீசிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர். கொலையான நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே குள்ளம்பட்டி பிரிவு சாலையில் நேற்று, இளைஞர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை சாலையில் வீசப்பட்டுக் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து காரிப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் தலையை மீட்டு விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VdF3EOS

Post a Comment

0 Comments