
சென்னை: கஞ்சா கடத்திய வழக்கில் கைதான2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு செப்.27-ம்தேதி சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலை பகுதியில் நின்றிருந்த காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சாக்குப் பைகள் இருப்பதாக மதுரவாயல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் நின்றிருந்த அந்த காரை சோதனை செய்ததில், கார் உள்ளே இருந்த சாக்குபைகளில் 186 கிலோ எடைகொண்ட கஞ்சா மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சா கடத்தி வந்ததாக மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த புதுராஜா (25), பெரிய கருப்பன் (39) ஆகியோர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ud5Uhnp
0 Comments