Crime

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் 6 வயது சிறுமி இன்று (நவ.27) மாலை கடத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது தாயாரை தொலைபேசிக்கு வந்த அழைப்பில் ரூ.5 லட்சம் கொடுத்தால் சிறுமி பத்திரமாக வீடு திரும்புவார் என மறுமுனையில் பேசியவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் சிறுமியை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

முதலாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, தந்து 8 வயது சகோதரருடன் டியூஷனுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது காரில் வந்த சிலர் அவரை கடத்தி சென்றுள்ளனர். கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒய்யூர் (Oyoor) பகுதியில் இது நடந்துள்ளது. மாலை 4.45 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N5hI2We

Post a Comment

0 Comments