Crime

தருமபுரி: போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் நேற்று தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பென்னாகரம் வட்டம் ஏரியூர் அடுத்த நெருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (50). இவர் ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 18 வயது பெண்ணுடன் சகாதேவனுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சகாதேவன் நெருங்கிப் பழகிய நிலையில் அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை வயதில் தற்போது குழந்தை உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tNg4vAY

Post a Comment

0 Comments