
கிருஷ்ணகிரி: தங்களிடம் முதலீடு செய்தால் அதிகலாபம் தருவதாகக் கூறி, ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பல கோடி மோசடி செய்துள்ளதாக கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோட்டைச் சேர்ந்த நவீன்,விருதுநகரைச் சேர்ந்த முத்துச்செல்வன் ஆகியோர், ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு, ‘யூனிக் எக்ஸ்போர்ட்’நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இந்நிறுவனத்தின் முகவர்களான, போச்சம்பள்ளி அருகேஉள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தஅரசுப் பேருந்து ஓட்டுநர் திருமால்,அவரது மனைவி அம்பிகா, முன்னாள் ராணுவ வீரர் நீலமேகம் உள்ளிட்ட சிலர் எங்களை அணுகினர். யூனிக் எக்ஸ்போர்ட் நிறுவனம் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதாகவும், அந்தநிறுவனத்தில் மூதலீடு செய்தால் கிடைக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aGzrHZJ
0 Comments