
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர்மற்றும் நடத்துநரை அரிவாளால்வெட்டியவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தி, பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் நேற்று பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசத்திலிருந்து திருநெல்வேலியை நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ரெஜின்(43) ஓட்டினார். அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகால் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (40) நடத்துநராக செயல்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/10F2CeU
0 Comments