
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரிடம் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீஸார் கோவையில் விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கும் இடமாக பயன்படுத்தி வந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இச்சம்பவத்தின் போது, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சயான் உள்ளிட்ட 10 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bpcIjws
0 Comments