
கோவை: கோவை அருகே, வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக தந்தை, மகனை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் வினோபாரதி (30). இவர், கடந்த 10-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். அப்போது, வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 70 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். அதேபோல, மின் வாரிய உதவிப் பொறியாளர் சுரேந்திரன் என்பவரது வீட்டிலும் 42 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z17vmng
0 Comments