Crime

அகமதாபாத்: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு போலி டிக்கெட்கள் அச்சடித்து விற்பனை செய்த 4 இளைஞர்களை அகமதாபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் 14-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டி கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்களை போலியாக அச்சடித்து விற்பனை செய்த அகமதாபாத்தை சேர்ந்த ஜெய்மின் பிரஜாபதி, துருமில் தாகூர், ராஜ்வீர் தாக்கூர், குஷ் மீனா ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XO1nF9

Post a Comment

0 Comments