Crime

கோவை: கோவை காவல் நிலையத்தில் பெண் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் செல்போனை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாண்டியன் (45), அவரது மனைவி திலகவதி (40) ஆகியோரை கோவை ஆலாந்துறை காவல்நிலையத்தில் வைத்து, திருச்செந்தூர் போலீஸார் விசாரித்தனர். அப்போது, திலகவதி மயங்கி விழுந்து உயிரிழந்தார். கழிவறைக்குச் செல்லும் போது விஷம் சாப்பிட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PhwbSdD

Post a Comment

0 Comments