Crime

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ரவுடியான இவர், அங்குள்ள பொதுமக்களிடம் அடிக்கடி தகராறு செய்து. கத்தியை காட்டி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாராயணசாமி, திடீரென நாட்டுவெடி குண்டை வீசி விட்டு தப்பியோடியுள்ளார். இதில் அந்த நாட்டு வெடி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NXH1zLZ

Post a Comment

0 Comments