Crime

ஈரோடு: ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்தவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து நகைகளைப் பறிமுதல் செய்தனர். ஈரோடு கணபதி நகரைச் சேர்ந்தவர் துரைசாமி. ஆடிட்டர். கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 150 பவுன் நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட எஸ்பி ஜவகர் உத்தரவின்படி, டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

திருட்டு நடந்த வீட்டினைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும், முன்னாள் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் திருடும் முறைகள் குறித்து விசாரிக்கப்பட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் குற்றவாளி வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் என தனிப்படை போலீஸார் கண்டறிந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h0Ew2yo

Post a Comment

0 Comments