Crime

சென்னை: சுங்கத் துறையில் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் காதில் ‘ப்ளூடூத்’ கருவி பொருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 30 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கத் துறையில் 7 ஓட்டுநர் பணி, 8 கேண்டீன் உதவியாளர், ஒரு சமையலர், ஒரு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சென்னை பாரிமுனையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் நாடு முழுவதும் இருந்து 1,600 பேர் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hGBxDKN

Post a Comment

0 Comments