
செங்கல்பட்டு: கிண்டி அனைத்து மகளிர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த பிரபாகர் என்ற நபர் தன் வசிப்பிடம் அருகே தனக்கு உணவு சமைத்து கொடுக்கும் பெண்ணின் 9 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் பிரபாகரனை கைது செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணைகள் செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன்பு நடைபெற்று வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kprfVc3
0 Comments