Crime

திருவள்ளூர்: மீஞ்சூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர்,தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின்மாநில முதன்மை பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்தசில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச்சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற தொழிலதிபரை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ev64IX9

Post a Comment

0 Comments