Crime

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ.11.98 லட்சம் பணத்தை எடுத்துவந்த ஆந்திராவைச் சேர்ந்த நபரை ஆர்பிஎஃப் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பார்சல் அலுவலகத்தில் ஆர்பிஎஃப் தலைமைக் காவலர் தினேஷ்குமார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமானமுறையில் ஒருநபர் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். தொடர்ந்து, அவரது பையைவாங்கி சோதித்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Xjoir7

Post a Comment

0 Comments