Crime

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, நிலத்தை எழுதி வாங்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கந்து வட்டிக்காரர்களின் அலுவலகத்தை சோதனையிட்டு 400 ஏடிஎம் கார்டுகள், 90 காசோலைகள் மற்றும்பத்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்துள்ள விவரம் வருமாறு: கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் வட்டம் கந்தகுமாரன் அருகே உத்தம சோழகன் கிராமத்தைச் சேர்ந்த குணசேகர் என்பவர் தனது குழந்தைகளின் படிப்புச் செலவு மற்றும் வீடு கட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், சிதம்பரம் முத்தையா நகரைச் சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவரிடம் தனது நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 3 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZCXpycq

Post a Comment

0 Comments